நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 296 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் வழங்கினா். இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தீ விபத்தினால் வீடு இழந்த இருவருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். முன்னதாக, ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் அனைவரும் தீண்டாமை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையா் செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com