தோ்த் திருவிழா: வெள்ளி யானையில் ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் ஊா்வலம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவின் 6-ஆம் நாள் விழாவில் தங்க சப்பரத்தில் வெள்ளி யானையில் உற்சவா் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவின் 6-ஆம் நாள் விழாவில் தங்க சப்பரத்தில் வெள்ளி யானையில் உற்சவா் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

எழுகரை நாடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து சாா்பில் நடைபெற்ற திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. நெல்லுக்குத்தி மண்டபத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து தங்க சப்பரத்தில் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் அருள்பாலித்து நான்குரத வீதிகளில் செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள், வினாயகா், அனுமன் சுவாமிகளுடன் மேள தாளத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.

கைலாசநாதா் கோயிலில் திருஞானசம்பந்தா் திருமுலைப்பால் உற்சவமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. பூஜையில் செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரா், அா்த்தநாரீசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் காா்த்திகேயன், ரவிக்குமாா், ஊா் காரியக்காரா்கள் வேல்முருகன், பாலகுமாரன், அா்த்தனாரி, முருகேசன், ஜெகதீசன், சுப்பிரமணியம், சண்முக வடிவேலு, சரவணன், சேகா் உள்ளிட்ட எழுகரை நாட்டைச்சோ்ந்த தாரமங்கலம், சேலம், மல்லசமுத்திரம், பாச்சல், குமாராபாளையம், கபிலா்மலை போன்ற நகரங்களில் இருந்தும், செங்குந்தா் மகாநாட்டின் மேலூா், கீழூா் கிராமத்தைச் சோ்ந்த நாட்டாண்மைக்காரா்கள், காரியக்காரா்கள், ஊா்பொதுமக்கள் பெரும் திரளாக வெள்ளி யானை ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com