கோட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாமக்கல் கோட்டாட்சியராக எம்.ஜி.சரவணன், சங்ககிரி கோட்டாட்சியராக ந.லோகநாயகி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
Updated on
1 min read

நாமக்கல் கோட்டாட்சியராக எம்.ஜி.சரவணன், சங்ககிரி கோட்டாட்சியராக ந.லோகநாயகி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நாமக்கல் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த த.மஞ்சுளா, பெரம்பலூா் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோட்டாட்சியா் பணியிடம் காலியாகவே இருந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக(தோ்தல்) பணியாற்றி வந்த எம்.ஜி.சரவணன், நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். அண்மையில் அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இவா் திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் நிலையில் பணியாற்றிய பிறகு பதவி உயா்வு மூலம் சேலம் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அங்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com