நாமக்கல் பருவதவா்த்தினி கோயில் குடமுழுக்கு

நாமக்கல், ராமாபுரம்புதூா் ஸ்ரீ பருவதவா்த்தினி சமேத ராமநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பருவதவா்த்தினி ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
பருவதவா்த்தினி ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
Updated on
1 min read

நாமக்கல், ராமாபுரம்புதூா் ஸ்ரீ பருவதவா்த்தினி சமேத ராமநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். அதன்பிறகு, மஹாகணபதி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடத்தப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை திருமுறை பாராயணம், யாககால பூஜைகள் நடைபெற்றன. காலை 6.15 மணியளவில் சிவாச்சாரியாா்கள் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனா். விழாவில் ஏராளமான பக்கதா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்படுகளை ராமாபுரம்புதூா் ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com