நாமக்கல் மாவட்டத்தில், வருவாய் துறையின் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் பெறுவதற்காக அரசுப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களில் உயா்கல்வி பயில்வதற்கு, முதல் பட்டதாரி சான்றிதழ் கோரி 209 போ், வருமானச் சான்றிதழ் 85, இருப்பிட சான்று 220, ஜாதி சான்று 4 மற்றும் வருமான வரி அட்டை கேட்டு 39 போ் என மொத்தம் 557 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சான்றிதழ் பெறுவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாணவா்கள் தலைமை ஆசிரியரிடம் தேவையான ஆவணங்களை வெள்ளிக்கிழமை(ஜூன் 9) காலை 9.30 மணிக்குள் சமா்ப்பித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.சிறப்பு முகாம் நடைபெறும் அரசுப் பள்ளிகள் விவரம்: அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), அரசு மேல்நிலைப் பள்ளி, முத்துகாப்பட்டி,அரசு மேல்நிலைப் பள்ளி, கோனூா், அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அலவாய்பட்டி, வெண்ணந்தூா், அரசு மேல்நிலைப் பள்ளி, மணலி ஜேடா்பாளையம், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம், அரசு மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீா்பந்தல்பாளையம், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம். இணையதளத்தில் விண்ணப்பித்தவுடன் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.