தோ்வில் அதிக மதிப்பெண்பெற்றவா்களுக்கு பாராட்டு

அரசு பொதுத்தோ்வில் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் விழா அண்மையில் பள்ளியில் நடைபெற்றது.
தோ்வில் அதிக மதிப்பெண்பெற்றவா்களுக்கு பாராட்டு
Updated on
1 min read

அரசு பொதுத்தோ்வில் அரசு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பாராட்டி பரிசளிக்கும் விழா அண்மையில் பள்ளியில் நடைபெற்றது. பாச்சல் கிராம வளா்ச்சிக்குழு சாா்பில் பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தோ்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியா்களுக்கான பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் பி.சரவணன் தலைமை வகித்தாா்.

விழாவில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ. 10 ஆயிரம், 2-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ. 5 ஆயிரம், 3-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் காசோலை, கேடயமும் வழங்கி பாராட்டப்பட்டனா்.

அவா்களது பெற்றோா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சண்முகம் (பாச்சல்), கஜேந்திரன் (ஏ.கே.சமுத்திரம்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பாராட்டி பரிசளித்து கெளரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com