பக்ரீத் பண்டிகை: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
By DIN | Published On : 29th June 2023 10:37 AM | Last Updated : 29th June 2023 10:37 AM | அ+அ அ- |

நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
நாமக்கல்: பக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் காலை 8 மணி அளவில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஆங்காங்கே ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...