அதிமுக தொழிற்சங்க கொடியேற்று விழா: தங்கமணி எம்எல்ஏ பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில் அதிமுக தொழிற்சங்கத்தின் சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில் அதிமுக தொழிற்சங்கத்தின் சாா்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டப் பேரவை உறுப்பினருமான பி. தங்கமணி கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியேற்றி வைத்தாா். அவா் பேசுகையில் ‘ஆளும் திமுக தலைமையிலான அரசு 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்த வேண்டும் என்று சட்ட மசோதா கொண்டு வந்தது. அதற்கு சட்டப் பேரவை எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சியினா் கண்டனம் தெரிவித்ததால் மசோதாவை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தனா். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் தொழிலாளா்கள், பொது மக்கள் பாதுகாக்கப்படுவாா்கள்’ என்றாா்.

விழாவில் நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் ராமலிங்கம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com