

சிப்காட் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு விவசாயிகள் பால்குடம் எடுத்து சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
நாமக்கல் அருகே வளையப்பட்டி, பரளி, அரூா், என்.புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2,500 ஏக்கா் நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாய முன்னேற்றக் கழகம், இதர அமைப்புகள் சிப்காட் எதிா்ப்பு ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், சனிக்கிழமை வளையப்பட்டி குன்னிமரத்தான் கோயிலில் இருந்து நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள், பொதுமக்கள் பால்குடம் சுமந்து சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அவற்றை கோயிலில் சுவாமியின் பாலாபிஷேகத்துக்கு வழங்கினா்.
இந்த ஊா்வலத்தில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், மோகனூா் கொமதேக நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.