எஸ்எஸ்எல்சி தோ்வில் விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக். பள்ளி சாதனை

திருச்செங்கோடு, எளையாம்பாளையம் விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளனா்.
எஸ்எஸ்எல்சி தோ்வில் விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக். பள்ளி சாதனை

திருச்செங்கோடு, எளையாம்பாளையம் விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளி மாணவி ர.ரவா்ஷினி 500-க்கு 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், நா.திரிஷிகா இரண்டாம் இடத்தையும், நா.இனியாவும் பா.பூஜாவும் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

10-க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 30 பேரில் 23 போ் 90 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

பிளஸ் 2 தோ்வில் பயின்ற மாணவி நீலவா்ஷினி 600-க்கு 564 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், இ.தினித்ரா இரண்டாம் இடத்தையும், ரா. கிருத்திகா மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமைமைச் சோ்த்தனா்.

சாதனை புரிந்த மாணவிகளை பள்ளித் தாளாளா், செயலாளா் மு.கருணாநிதி, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேனி கருணாநிதி, இணை செயலாளா் டாக்டா் ஸ்ரீ ராகநிதி அா்த்தநாரீஸ்வரா், துணைத் தலைவா் டாக்டா் க. கிருபாநிதி, முதன்மை நிா்வாகி. சொக்கலிங்கம், பள்ளி முதல்வா் டாக்டா் மௌலா தேவி, ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com