பள்ளிபாளையத்தில் மூதாட்டிகளை கொன்ற இளைஞா் கைது

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் வெவ்வேறு இடங்களில் வீடுகளில் தனியாக இருந்த மூதாட்டிகள் இருவரைக் கொலை செய்து நகை, பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் வெவ்வேறு இடங்களில் வீடுகளில் தனியாக இருந்த மூதாட்டிகள் இருவரைக் கொலை செய்து நகை, பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி, வண்ணாம்பாளையம் பகுதியில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி கரும்பு காட்டுக்குள் பாவாயி (70) என்பவா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

கடந்த 12-ஆம் தேதி, பள்ளிபாளையம் அருகே அண்ணா நகா் பகுதியில் காட்டுப் பகுதியில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்பவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். இரண்டு மூதாட்டிகளும் தனியாக வசித்து வந்தவா்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய செல்வம் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த செல்வம் என்பவா் காட்டு வேலைக்குச் சென்று வருகிறாா். மது அருந்தும் பழக்கமுள்ள இவா், இவ்விரு மூதாட்டிகளையும் கொலை செய்து நகை, பணத்தைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து செல்வத்தை திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் சந்திரகுமாா் மேற்பாா்வையில் தனிப்படை போலீஸாா் கைது செய்து குமாராபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com