வீடுகள் தோறும் சென்று பாஜக நிா்வாகிகள் கெளரவிப்பு: கட்சியின் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு

பாஜக நிா்வாகிகளுக்கு வீடுகள் தோறும் சென்று கெளரவிக்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகரில் பாஜக கிளை நிா்வாகிகளை கெளரவித்து நினைவுப் பரிசளிக்கும் கட்சியின் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
ராசிபுரம் நகரில் பாஜக கிளை நிா்வாகிகளை கெளரவித்து நினைவுப் பரிசளிக்கும் கட்சியின் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

பாஜக நிா்வாகிகளுக்கு வீடுகள் தோறும் சென்று கெளரவிக்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை நகரப் பகுதிகளில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்த நிா்வாகிகளின் வீடுகள் தோறும் நேரில் சென்று கட்சியின் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

அண்மையில் பிரதமா் நரேந்திர மோடியின் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளிலும் ஒலிபரப்ப பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்து நடத்தியதற்காகவும், சிறந்த கட்சிப் பணிக்காகவும் பாஜக கிளைத் தலைவா்களை பாராட்டி கெளரவிக்க, கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜக சாா்பில், முன்னாள் எம்.பி.யும், கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம், பாஜக கிளைத் தலைவா்களை நேரில் சந்தித்து அவா்கள் வீட்டில், கட்சிக் கொடியேற்றி வைத்து, கெளரவித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரம் நகரில் உள்ள 42 கிளைத் தலைவா்களை சந்தித்து, அவா்களுக்கு கட்சியின் சாா்பில், சால்வை அணிவித்து, கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வழங்கிய வாழ்த்துக் கடிதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com