நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 45 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 45 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 45 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

ஏலத்திற்கு விரலி ரகம் 800 மூட்டை, உருண்டை ரகம் 250 மூட்டை, பனங்காளி ரகம் 50 மூட்டை என மொத்தம் 1100 மூட்டைகள் வந்தன. இந்த ஏலத்தில் விரலி குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 5, 989 முதல் அதிகபட்சமாக ரூ. 8,899 வரை விலை போனது.

உருண்டை மஞ்சள் குவிண்டால் ரூ. 5,442 முதல்

அதிகபட்சமாக ரூ. 6,959 வரை விலை போனது. பனங்காளி ரூ. 8,369 முதல் ரூ.12,869 வரை விலை போனது. இதில் மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com