நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 1432--ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 1432--ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

சேந்தமங்கலம் வட்டத்தில், மே 24 முதல் ஜூன் 1 வரையில் நடைபெறும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கிறாா். குமாரபாளையம் வட்டத்தில், மே 24 முதல் 26 வரையில் நடைபெறும் ஜமாபந்தியில், மாவட்ட வருவாய் அலுவலரும், நாமக்கல் வட்டத்தில், மே 24 முதல் ஜூன் 2 வரையில் நடைபெறும் ஜமாபந்தியில் தனித் துணை ஆட்சியரும் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பங்கேற்கின்றனா்.

ராசிபுரம் வட்டத்தில், மே 24 முதல் ஜூன் 1 வரையில் நடைபெறும் ஜமாபந்தியில், மாவட்ட வழங்கல் அலுவலரும், கொல்லிமலை வட்டத்தில், மே 24, 25 ஆகிய நாள்களில் கலால் உதவி ஆணையரும், மோகனூா் வட்டத்தில், மே 24 முதல் 31 வரையில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரும் பங்கேற்கின்றனா்.

திருச்செங்கோடு வட்டத்தில், மே 24 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் ஜமாபந்தியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரும், பரமத்தி வேலூா் வட்டத்தில் மே 24 முதல் ஜூன் 2 வரையில், திருச்செங்கோடு கோட்டாட்சியரும் பங்கேற்று ஜமாபந்தியை நடத்த உள்ளனா். இந்த வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) அரசு விடுமுறை, சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக, அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணிக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும். இதில், ஜமாபந்தி அலுவலா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை நிவா்த்தி செய்ய உள்ளாா். அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். நாமக்கல் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com