பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 1. 6 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11,048 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 22.19 -க்கும், குறைந்த பட்சமாக ரூ. 15.19-க்கும், சராசரியாக ரூ. 21.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2, 31,295-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5,043 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 21.80 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 18.55- க்கும், சராசரியாக ரூ. 20.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 422-க்கு ஏலம் போனது.