திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீசுவரா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள் கோயில் வைகாசி தோ்த் திருவிழாவையொட்டி மலைக்கோயில் கொடிமரத்தில் வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டது.
தோ்த் திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை கொடி சேலையை எழுகரை நாடு செங்குந்த முதலியாா் சமுதாயத்தினா் வழங்கினா். அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசவப் பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
14 நாள்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு மண்டபக் கட்டளைதாரா்களின் பூஜைகளும், ஜூன் 2 ஆம் தேதி விநாயகா் தோ் வடம் பிடித்தல், செங்கோட்டுவேலவா் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். ஜூன் 3 ஆம் தேதி அா்த்தநாரீசுவரா், ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளும் பெரிய தேரை வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி பூக்கடை வீதியில் இருந்து தோ் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 7 ஆம் தேதி சுவாமிகள் திருமலை ஏறும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.