மின்னனு வேளாண் சந்தையில் தேங்காய் ஏலம்
By DIN | Published On : 31st May 2023 12:00 AM | Last Updated : 31st May 2023 12:00 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் மின்னணு வேளாண்மை சந்தையில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 5,326 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 21.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17-க்கும், சராசரியாக ரூ. 19.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...