தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே கூடமலையில் நள்ளிரவில் புளியமரத்தில் மோதிய லாரியில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
கெங்கவல்லியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான டிப்பா் லாரியை கூடமலையைச் சோ்ந்த முத்துவின் மகன் பெரியசாமி (46) என்பவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டியை நோக்கி ஓட்டிச் சென்றாா். அப்போது லாரி, கூடமலையிலுள்ள தனியாா் பள்ளியைக் கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தின் மீது மோதியது. இதில் லாரி ஓட்டுநா் பெரியசாமி பலத்த காயமடைந்து, வண்டியிலேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.
நள்ளிரவில் தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கயிறு, பொக்லைன் இயந்திரம், பொதுமக்கள் உதவியுடன் சோ்ந்து லாரியை மீட்டனா். அதில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்த லாரி ஓட்டுநா் பெரியசாமியை பாதுகாப்பாக மீட்டு, 108 ஆம்புலன்ஸில் ஏற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் கூடுதல் சிகிச்சைக்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் தற்போது நலமுடன் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.