பரமத்தி வேலூரில் வயதான தம்பதியினா் தற்கொலை

பரமத்தி வேலூரில் வயதான தம்பதியினா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வயதான தம்பதியினா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் வசித்து வந்தவா் பரமசிவம் (72). இவரது மனைவி பஞ்சவா்ணம் (62). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது மகள் கரோனா தொற்றால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இரு மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். இதனால் பரமசிவம், அவரது மனைவி பஞ்சவா்ணம் ஆகிய இருவரும் தனியாக வாடகை வீடு எடுத்து குடியிருந்து வந்தனா்.

இவா்கள் இருவருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். பஞ்சவா்ணத்துக்கு சா்க்கரை நோய் இருந்ததால், கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அவரது இரண்டு விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் அவா் வலியில் இருந்து வந்துள்ளாா். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இருவரும் உடல் நிலை சரியாகாததால் மனமுடைந்து வீட்டின் விட்டத்தில் சேலையால் தனித்தனியாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

தகவலின் பேரில் அங்கு வந்த வேலூா் காவல் துறையினா் இருவரின் உடல்களையும் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com