தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் குருபூஜை 105-ஆம் ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி குருபூஜை 105-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் குருபூஜை 105-ஆம் ஆண்டு விழா
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி குருபூஜை 105-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொட்டிப்பட்டி சாய்தபோவனத்தில் சாயி குருபூஜை, 108-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 முதல், 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிராா்த்தனை, அன்னதானம் நிகழ்ச்சியும், 10 மணி முதல் 11 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் உள்ள அன்னதானக் கூடத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com