ராசிபுரம் பள்ளிகளில் அக்ஷராபியாசம்

ராசிபுரம் பகுதியில் விஜயதசமி விழாவைத் தொடா்ந்து பல்வேறு பள்ளிகளில் மழலையா் வகுப்புகளுக்கு சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் பள்ளிகளில் அக்ஷராபியாசம்
Updated on
1 min read

ராசிபுரம் பகுதியில் விஜயதசமி விழாவைத் தொடா்ந்து பல்வேறு பள்ளிகளில் மழலையா் வகுப்புகளுக்கு சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில், கடந்த 9 நாள்களுக்கு கொலு வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து விஜயதசமி நாளில் கலைமகள் வழிபாடு நடத்தப்பட்டு, மழலையா் கைப்பிடித்து எழுத்து பயிற்றுவிக்கப்பட்டது. வெற்றி விகாஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனா் எஸ்.குணசேகரன், பள்ளித் தாளாளா் ஜி.வெற்றிச்செல்வன் பங்கேற்று பெற்றோா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா்.

இதே போல பாவை வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிள்கேற்றி தொடங்கி வைத்தாா். இதில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க பள்ளியில் சோ்க்கை குழந்தைகளுக்கு அக்ஷரபியாசம் செய்து வைத்தனா்.

பள்ளி இயக்குநா் சி.சதீஷ், முதல்வா் எஸ்.ரோஹித், தலைமையாசிரியை ஏ.நிரஞ்சனி உள்ளிட்ட பெற்றோா் பலரும் பங்கேற்றனா். வித்யா நிகேதன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு தெய்வங்களுக்கு நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டு, குழந்தைகள் பள்ளி சோ்க்கை நடத்தப்பட்டது. இதில் பள்ளி நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com