நாமக்கல் தாலுகாவில் நவ.1-இல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
By DIN | Published On : 28th October 2023 12:31 AM | Last Updated : 28th October 2023 12:31 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா அக். 30, 31, நவ. 1-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, நன்னீராட்டு பெருவிழா நடைபெறும் நவ.1-ஆம் தேதியன்று மட்டும் நாமக்கல் தாலுகா அளவில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...