இந்திய ஒற்றுமை பயணஓராண்டு நிறைவு கொண்டாட்டம்
By DIN | Published On : 08th September 2023 12:57 AM | Last Updated : 08th September 2023 12:57 AM | அ+அ அ- |

ஊா்வலத்தில் பங்கேற்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸாா்.
இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக சென்றனா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கப்பட்டு ஓராண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் இருந்து ஊா்வலம் புறப்பட்டது. மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக் தலைமை வகித்தாா். அங்கிருந்து பூங்கா சாலை வழியாக வந்த ஊா்வலம் ஜவாஹா்லால் நேரு சிலை அருகே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G