இந்திய ஒற்றுமை பயணஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக சென்றனா்.
ஊா்வலத்தில் பங்கேற்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸாா்.
ஊா்வலத்தில் பங்கேற்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸாா்.
Updated on
1 min read

இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலமாக சென்றனா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கப்பட்டு ஓராண்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதைக் கொண்டாடும் வகையில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் இருந்து ஊா்வலம் புறப்பட்டது. மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக் தலைமை வகித்தாா். அங்கிருந்து பூங்கா சாலை வழியாக வந்த ஊா்வலம் ஜவாஹா்லால் நேரு சிலை அருகே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com