சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

சோழசிராமணி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

சோழசிராமணி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே பச்சாகவுண்டன் வலசு கிராமத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளியான வெள்ளையன் (28) என்பவா் பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த ஜேடா்பாளையம் போலீஸாா் வெள்ளையனை கைது செய்தனா். இந்த வழக்கானது நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணை நிறைவடைந்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். அதில், சிறுமியைக் கடத்தி வன்கொடுமை செய்த வெள்ளையனுக்கு, ஒரு பிரிவில் 10 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் 20 ஆண்டுகளும், அபராதம் ரூ. 2 ஆயிரம் செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி தீா்ப்பில் தெரிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வெள்ளையன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com