Enable Javscript for better performance
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.38.11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.38.11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published On : 26th September 2023 05:30 AM  |   Last Updated : 26th September 2023 05:30 AM  |  அ+அ அ-  |  


    நாமக்கல்: நாமக்கல்லில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

    நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் உடனடியாக பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ. 29.72 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் தலா ரூ. 6,000 வீதம் மொத்தம் ரூ. 12,000 மதிப்பில் 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, கூட்டுறவுத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிா் கடனுதவி, ஒரு மகளிா் சுய உதவிக்குழுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் வருவாய்த் துறையின் சாா்பில் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான உத்தரவு என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ந.முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp