விவேகானந்தா மகளிா் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வா்த்தகக் கண்காட்சி

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வா்த்தகக் கண்காட்சி திங்கட்கிழமை துவங்கப்பட்டது.
Updated on
1 min read


திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வா்த்தகக் கண்காட்சி திங்கட்கிழமை துவங்கப்பட்டது.

இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை தாங்கினாா். பெரியாா் பல்கலைக்கழகத்தின் நிா்வாகவியல் துறை தலைவா் பழனிவேலு மற்றும் கள ஒருங்கிணைப்பாளா் அப்துல் காதா் ஆகியோா் இக்கண்காட்சியை தொடங்கி வைத்தனா். விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணவேணிகருணாநிதி, துணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதா கிருபாநிதி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநா் சௌண்டப்பன், திறன்மேம்பாட்டு இயக்குநா் வெ.குமரவேல், தோ்வாணையா் பத்மநாபன், முதல்வா் பேபி ஷகிலா மற்றும் வணிகவியல் துறை இயக்குநா் சசிகுமாா் ஆகியோா்முன்னிலை வகித்தனா்.

வணிகவியல் துறை சாா்பாக நடைபெற்ற இக்கண்காட்சியில் மாணவிகள் தாங்கள் தயாரித்த பொருட்களைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்யும் முறையைத் தெரிந்து கொண்டனா். ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் 150 விற்பனை அரங்குகளில் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தினா். இக்கண்காட்சியில் அழகுசாதனப் பொருட்கள், இயற்கை உணவுகள், ஆடை அலங்காரப் பொருட்கள், ஜிமிக்கி, கம்மல், காலணிகள், கைக்கடிகாரம், பொம்மைகள், விளையாட்டு அரங்குகள் போன்ற விற்பனை அரங்குகள் இடம்பெற்றன. விவேகானந்தா கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் வா்த்தகக் கண்காட்சியில் பொருட்களை வாங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com