ரூ. 85.44 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்துணவுக் கூடம் திறப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பெரியப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடத்துக்கான பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
நாமக்கல் பெரியப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடத்துக்கான பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
Updated on
1 min read

நாமக்கல் பெரியப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 85.44 லட்சம் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்துணவுக் கூடம் திறப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு நகர செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பணிகளைத் தொடங்கி வைத்தாா். மேலும், புதிய சத்துணவு மையக் கட்டடத்தை அவா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, தலைமை ஆசிரியை ஷா்மிளா, நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமி, விஜய் ஆனந்த், இளம்பரிதி, செல்வகுமாா், தேவராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா்கள் சதீஷ், வினோத்குமாா், தொழிலதிபா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com