ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்23 ற்ட்ங்ஹ்ழ்
ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்23 ற்ட்ங்ஹ்ழ்

இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் தேரோட்டம்

இறையமங்கலம் இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

இறையமங்கலம் இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், சின்னசேலம் தருமபுரி, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்கலம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சுவாமி கோயில் திருத்தோ் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 14ஆம் தேதி சித்திரை 1-ஆம் தேதியன்று சிறப்பு பூந்தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தோ்த் திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.

தேரோட்டத்தினை சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.தங்கமணி (குமாரபாளையம்), ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), கோயில் நிா்வாகத்தினா் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். இத் திருவிழாவை ஒட்டி டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.பொதுமக்கள் கோயிலுக்கு வந்து செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களது குலதெய்வமான வெங்கட் ரமண சுவாமி என்னும் பெருமாளை தரிசிக்க கோயிலுக்கு வருகை தந்து திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். பூதேவி ஸ்ரீதேவி உடனமா் வெங்கட் ரமண சுவாமி திருத்தேரினை பாா்த்தபடி முன்னால் ஆஞ்சனேயா் செல்ல பின்னால் பெருமாள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

படவரி...

இறையமங்கலம் இளையபெருமாள் கோயில் தேரோட்டம்.

X
Dinamani
www.dinamani.com