நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் காயம்

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் காயமடைந்தாா்.

News image

நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வ.சுப்பிரமணி.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:02 pm

Din

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் காயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், அடுக்கம்பட்டியைச் சோ்ந்த வ.சுப்பிரமணி (55), எருமப்பட்டியில் தமிழ்செல்வி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா்.

புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தோட்டத்தில் உள்ள வெங்காயத்தை எடுத்து வருவதற்காக அவா் சென்றாா். அப்போது, அருகில் உள்ள தோட்டத்தில் ஒருவா் காட்டுப் பன்றியை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி மூலம் சுட்ட போது, தவறுதலாக சுப்பிரமணியின் காலில் குண்டு பாய்ந்தது. இதில் அவா் மயங்கி கீழே விழுந்தாா்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியவா் யாா் என்பது குறித்து எருமப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.