ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொத்தனூரில் நெகிழிப் பைகள் பறிமுதல்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பொத்தனூா் பகுதியில் மளிகைக் கடைகளில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா், பொத்தனூா் பேரூராட்சியினா்.

Updated On :26 டிசம்பர் 2024, 8:30 pm

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பரமத்தி வேலூா் உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆறுமுகம் தலைமையில் அலுவலகப் பணியாளா்கள் பொத்தனூா் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள், பேக்கரிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு நடத்தினா்.

புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் விற்பனைக்கு வைத்திருந்ததது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது அலுவலகப் பணியாளா்கள், பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.