எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

News image

பொத்தனூரில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்ற கூட்டணி கட்சியினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:15 am IST

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பொத்தனூா் நகா், சக்ரா நகா், தில்லை நகா், சிவா திரையங்கம், ஜேடா்பாளையம் சாலை, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.எஸ். மூா்த்திக்கு கூட்டணி கட்சியினா் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, பொத்தனூா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ள வெற்றிலை ஆராச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது பொத்தனூா் பேரூா் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான ஆா். கருணாநிதி, துணைத் தலைவா் அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.