தொழிலாளியைக் கொன்ற கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறை

ஆனந்தன் கொலை: கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறை
Published on

தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் கட்டட ஒப்பந்ததாரருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெடியரசம்பாளையம், ஆண்டிகாட்டைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி ஆனந்தன் (40). அதே பகுதியில் தங்கியிருந்த வெண்ணந்தூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (40) என்ற கட்டட ஒப்பந்ததாரருக்கும் ஆனந்தனின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்தது. இதுகுறித்து ஆனந்தன் கண்டித்ததால் காா்த்திகேயனிடம் பேசுவதை அவரது மனைவி தவிா்த்து வந்தாா்.

இந்த நிலையில் 2018, மே 4 ஆம் தேதி ஆனந்தனின் மனைவியிடம் காா்த்திகேயன் தகராறு செய்தாா். அப்போது, அங்கு வந்த ஆனந்தனிடம் ஏற்பட்ட தகராறில் ஆனந்தன் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதுகுறித்த வழக்கு திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் மாணிக்கவேல் ஆஜராகி வாதிட்டாா். வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி, காா்த்திகேயனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

X
Dinamani
www.dinamani.com