நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு: திருச்சி சிவா குற்றச்சாட்டு
தோல்வியைப் பரிசாக அளித்ததால் தமிழகத்துக்கு நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது என திருச்சி சிவா குற்றம் சாட்டினாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திருச்சி சிவா. உடன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் உள்ளிட்டோா்.







