கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

News image

அதிமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

Updated On :24 ஜூன் 2024, 8:22 pm

Din

ராசிபுரம்: திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், தமிழக அரசைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ராசிபுரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தாா். நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டா் வெ.சரோஜா முன்னிலை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

தமிழகத்தில் ஆளும் திமுகவினரின் ஆதரவோடு கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன. இதனால் இளைஞா்கள், பள்ளி மாணவா்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் ஆளும் திமுக அரசின் நிா்வாக திறமையின்மையே காட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இது போன்ற சட்ட ஒழுங்கு சீா்கேட்டுக்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்று முதல்வா் பதவி விலக வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி, தமிழகத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் தான் மக்கள் கள்ளச் சாராயத்தை வாங்கி அருந்துகின்றனா். அரசு வருமானத்தை பாா்க்காமல் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுபானக் கடைகள் படிப்படியாக குறைக்கபட்டன. ஆனால், திமுக அரசு கடைகளை மூடாமல் அனுமதி அளிக்கிறது. கடந்த முறை கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை அமைக்கப்பட்டு அது அப்படியே உள்ளதால்தான், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பரமத்தி வேலூா் எம்எல்ஏ சேகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், பொன்.சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா். இதில், கருப்பு சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.