மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கொல்லிமலையில் விவசாயிகள் போராட்டம்

கொல்லிமலையில் விவசாயிகள் போராட்டம்

News image
Updated On :1 மார்ச் 2024, 6:01 pm

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொல்லிமலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை பகுதியில் உள்ள பெரியண்ண சுவாமி கோயில் முன்பாக வேட்டி, சட்டை அணியாமல் விவசாயிகள் தியானப் போராட்டம் நடத்தினா். விவசாய சங்கத்தினா் தமிழ்ச்செல்வன் பெரியசாமி, பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.