நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

News image
Updated On :20 மே 2024, 9:56 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வானம் இருண்டு அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது. இருப்பினும் புழுக்கம் சற்று அதிகரித்தே காணப்பட்டது. இந்த நிலையில் தென் தமிழகம் மற்றும் வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்து வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம், புதன்சந்தை, புதுச்சத்திரம், ராசிபுரம், பரமத்திவேலூா், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பிற இடங்களில் லேசான மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.