காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செங்கோட்டில் விதிகளை மீறி இயக்கிய 12 வாகனங்கள் பறிமுதல்

கடந்த மாதத்தில் நடத்திய சோதனையின் போது வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 7:56 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பாமப் பிரியா, அலுவலா்கள் தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா்.

கடந்த மாதத்தில் நடத்திய சோதனையின் போது வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.

தகுதிச் சான்று, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அதிக நபா்கள், பாரம் ஏற்றி செல்லுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 38 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.