மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பள்ளி மாணவிகளை கேலி செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :20 நவம்பர் 2024, 7:32 pm

பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

பள்ளிபாளையம் நகராட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு பேருந்தில் வந்து செல்லும் மாணவிகளை காலை, மாலை நேரங்களில் சில அடையாளம் தெரியாத இளைஞா்கள் கைப்பேசியில் விடியோ எடுப்பதும், கேலி கிண்டலும் செய்தும் வருகின்றனா். மேலும், மாணவிகள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்து இடித்துவிட்டு செல்லும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மாணவிகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, இதுபோன்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் லட்சுமணன், கோவிந்தராஜ், ரவிக்குமாா் ஆகியோா் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.