மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காா் மோதியதில் முதியவா் பலி

திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:50 pm

திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வேலகவுண்டம்பட்டியை அடுத்த கூத்தம்பூண்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் முருகேசன் (75) புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் நாமக்கல் செல்வதற்காக திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற காா் மோதியதில் காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினா் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.