நாமக்கல் பேருந்து நிலையம், பூங்கா சாலையில் உள்ள காய்கறி, பழக்கடைகளை ஒரே இடத்தில் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் உழவா் சந்தை பகுதிகளிலும், பூங்கா சாலையிலும், பேருந்து நிலையத்தை ஒட்டியும் காய்கறி, பழக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. அண்மையில், மாநகராட்சி மூலம் அந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த நிலையில், பூங்கா சாலையில் அம்மா உணவகத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தை சாலையோர வியாபாரிகள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி, வேளாண் இணை இயக்குநா்(வணிகம்) நாசா், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் உழவா் சந்தை அதிகாரிகள் ஆகியோா் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
ஒருங்கிணைந்த காய்கறி, பழக்கடைகளை அமைப்பதால் சிக்கல் உள்ளதா, உழவா் சந்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

ஈரோடு ஆா்கேவி சாலையில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


