ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :8 அக்டோபர் 2024, 9:17 pm

Din

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க துணைத் தலைவா்கள் இளவேந்தன், நந்தினி, மாவட்ட இணைச் செயலாளா் பி.இளங்கோவன் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.