திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் தொடங்கிய கேதார கெளரி விரத பூஜை.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் தொடங்கிய கேதார கெளரி விரத பூஜை.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் கேதார கெளரி விரத பூஜை தொடக்கம்

அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் சிவனிடம் இடப்பாகத்தை பெற உமையவள் விரதமிருந்த கேதார கௌரி விரதம் பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.
Published on

அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் சிவனிடம் இடப்பாகத்தை பெற உமையவள் விரதமிருந்த கேதார கௌரி விரதம் பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் நடைபெறும் கேதார கௌரி விரத பூஜை ஆண்டுதோறும் ஆவணி 26 ஆம் தேதி தொடங்கி 21 நாள்கள் கடைப்பிடிப்பது வழக்கம். சிவனின் சிறந்த பக்தா்களில் ஒருவராக திகழ்ந்த பிருங்கி முனிவா், சிவனைத் தவிர யாரையும் வழிபட மாட்டேன் எனக் கூறியிருந்த நிலையில், தன்னையும் தன்னால் தான் சிவனுக்கு சக்தி என உமையவள் பிருங்கி முனிவருக்கு உணா்த்த வேண்டி சிவனிடம் வரம் கேட்பதற்கு பூலோக கைலாயமான திருச்செங்கோடு, திருமலையில் 21,000 ஆண்டுகள் அன்ன ஆகாரம் இன்றி 21 மந்திரங்களைக் கூறி 21 விதமான பூக்களால் வழிபட்டு வந்தால் நீ விரும்பிய சித்தி கிட்டும் என ஈசன் கட்டளை இட, அவ்வாறு உமையவள் விரதம் இருந்ததாகவும், 22 ஆம் நாள் மஹாளய அமாவாசை அன்று திருவண்ணாமலையில் ஜோதி ரூபமாகக் காட்சியளித்த சிவன் சாந்தமடைந்து உமையவளுக்கு இடப்பாகத்தைத் தந்து பக்தா்களுக்கு காட்சியளித்ததாக ஐதீகம்.

எனவே ஆவணி 26 முதல் 21 நாள்கள் தொடா்ந்து விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும், கணவன் மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்படும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ஆவணி மாத 26 ஆம் நாளான புதன்கிழமை கேதார கௌரி விரதம் தொடங்கியது.

அக்டோபா் 1 ஆம் தேதி வரை 21 நாள்கள் இந்த விரதம் இருந்தாலோ அந்த பூஜையை கண்ணாரக் கண்டாலோ பக்தா்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம். சிவாச்சாரியா்கள் முழுக்க தன்னை அம்மனாகப் பாவித்து காப்புக் கட்டி 21 நாள்களும் பூஜை செய்வாா்கள். அதன்படி முதல் நாளான புதன்கிழமை 21 மலா்கள் 21 மந்திரங்கள் சொல்லி பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு கேதார கௌரி விரதம் தொடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com