மாணவிக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.
மாணவிக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

17 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

Published on

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் திமுக கிளைச் செயலாளா் குடும்பத்தைச் சாா்ந்த 17 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஒன்றியம் மற்றும் ராசிபுரம் நகரம், சேந்தமங்கலம் பேரூா் பகுதிகளைச் சாா்ந்த கிளைச் செயலாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் மேயா் து.கலாநிதி, நகரச் செயலாளா்கள் ராணா ஆனந்த், செ.பூபதி, சிவக்குமாா், ஒன்றிய செயலாளா்கள் பாலசுப்பிரமணியம், ஜெயபிரகாஷ், பேரூா் செயலாளா்கள் தனபால், முருகேசன், பொன். சித்தாா்த், பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com