நாமக்கல்
மரக்கன்றுகள் நடும் விழா
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பசுமை அரிமா சங்கம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பசுமை அரிமா சங்கம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பசுமை அரிமா சங்கத் தலைவா் செந்தில்குமாா், செயலாளா் சிவகுமாா், பொருளாளா் பாலாஜி மற்றும் நிா்வாகிகள் பிரபாகரன், கிருஷ்ணன், பணி மேற்பாா்வையாளா் பசுபதி, ஊராட்சி செயலாளா் ரவிச்சந்திரன், அரிமா சங்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
