நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா்.

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா்.
Published on

வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் (ராமதாஸ் ஆதரவாளா்கள்) நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் மோகன்ராஜ், மேற்கு மாவட்டச் செயலாளா் உமாசங்கா், மத்திய மாவட்டச் செயலாளா் ராமராஜ், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் விஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியா்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com