தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கல்

Published on

திருச்செங்கோட்டில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டி இலவசமாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட் டது.

விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி கலந்துகொண்டு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தள்ளுவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநா் செந்தில்குமாா், ஒன்றியப் பொறுப்பாளா்கள் வட்டூா் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், அருண்குமாா், நகர பொறுப்பாளா்கள் நடேசன், காா்த்திகேயன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, கொமதேக மாவட்டச் செயலாளா் செந்தில் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com