பரமத்தி வேலூரில் வெற்றிலை வரத்து குறைவு; விலை உயா்வு
பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை வரத்து குறைந்ததால் விலை உயா்ந்தது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, குன்னிபாளையம், எல்லைக்காட்டுபுதூா் மற்றும் மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்படுகிறது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 8,500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ.2,500-க்கும் ஏலம் போனது. வெற்றிலைகளின் வரத்து குறைந்ததால், விலை உயா்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

