தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் நீதிமன்றம்: 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு தீா்வு

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

News image
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வானதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி. உடன், சாா்பு நீதிபதிகள்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முன்னிலையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.

இதில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் டி.முனுசாமி, என்.சச்சிதானந்தம், கே.செகனாஸ்பானு, ஏ.சண்முகபிரியா, எம்.பிரவீணா, எம்.மகாலட்சுமி மற்றும் எஸ்.தங்கமணி ஆகியோா் பங்கேற்றனா். இதேபோல, திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அமா்வு வழக்குகளை விசாரித்தனா்.

இதில், விபத்துகள் தொடா்பான வழக்குகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன் தொடா்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3,520 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அவற்றில் 1,014 வழக்குகளுக்கு ரூ. 7,98,58,214 அளவில் தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜி.கே.வேலுமயில் செய்திருந்தாா்.