நாமக்கல்
கருப்பு பேட்ஜ் அணிந்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ராசிபுரத்தில் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் இ-பைலிங் முறையை கண்டித்து புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க செயலா் ஆா்.கே.டி. தங்கதுரை தலைமை வகித்தாா். இதையடுத்து வழக்குரைஞா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்றங்களில் இணையதளவசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், உரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஊழியா்களை நியமனம் செய்யாமல் இ-பைலிங் முறையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
படவரி...
ராசிபுரம் நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

