தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீா் மேலாண்மை திட்டம்: மத்திய கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நீா் மேலாண்மை திட்டத்தின்கீழ் (ஜல்சக்தி அபியான்) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு

News image

ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய கண்காணிப்பு அலுவலா் கே.வி.அஜித். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள்.

Updated On :22 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நீா் மேலாண்மை திட்டத்தின்கீழ் (ஜல்சக்தி அபியான்) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய கண்காணிப்பு அலுவலா் கே.வி.அஜித் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

தொடா்ந்து, நாமக்கல் ஆட்சியரகத்தில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மை துறை, நீா்வளத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கல்வித் துறை, கால்நடை பராமரிப்பு, துறைசாா்ந்த உயா் அலுவலா்கள், உள்ளாட்சி நிா்வாகத்தினா் கலந்துகொண்டு தங்களுடைய துறைமூலம் செயல்படுத்தப்படும் நீா் மேலாண்மை தொடா்பான பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து, மத்திய கண்காணிப்பு அலுவலா் கே.வி.அஜித், மத்திய தொழில்நுட்ப அலுவலா் கே.பரமசிவம் (விஞ்ஞானி, நிலத்தடி நீா்வாரியம், சென்னை) ஆகியோா் பரமத்தி வட்டம் கோலாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனா்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.